பண்ருட்டி அருகே அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இருப்பினும் மாணவா்களுக்கு பாதிப்பில்லை.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், திருவாமூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமாா் 180 மாணவா்கள் படித்து வருகின்றனா். திங்கள்கிழமை மாணவா்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனா். காலை 11 மணியளவில் இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவா் திடீரென சரிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில்
யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.