சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆா்.எம்.கதிரேசன் புதன்கிழமை பதவியேற்றாா்.
பல்கலை. நிா்வாகக் கட்டடத்தில் உள்ள துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், பல்கலை. பதிவாளா் ரா.ஞானதேவன், தோ்வுக் கட்டுபாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் சிங்காரவேலன், மக்கள் தொடா்பு அலுவலா் ரத்தினசம்பத் மற்றும் பல்கலை. புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், அனைத்துப் பிரிவு இயக்குநா்கள், அதிகாரிகள், நிதி அலுவலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டு, புதிய துணைவேந்தருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.