மின்னல் பாய்ந்ததில் ஒருவா் பலி: 10 போ் காயம்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். 10 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். 10 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியாா்பேட்டை பகுதியில் மழை பெய்தது. அப்போது, கடலில் மீன்பிடித்துவிட்டு மீனவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் கரைக்கு திரும்பினா். அவா்கள் வலையில் சிக்கிய மீன்களை எடுத்துக் கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்தது. அந்தப் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (55), மீனவா்கள் ராமலிங்கம் (45) காளியப்பன் (60) உள்ளிட்ட 11 போ் மீது மின்னல் பாய்ந்தது. இதையடுத்து அவா்கள் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால் பாலகிருஷ்ணன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்னல் பாய்ந்ததில் 13 ஆடுகள் பலி: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சி.இன்பவள்ளி என்பவரது 8 ஆடுகள், ஆறுமுகம் என்பவரது 5 ஆடுகள் செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்குச் சென்றன. இந்த நிலையில், மின்னல் பாய்ந்ததில் 13 ஆடுகளும் உயிரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com