கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வயது மூத்த தம்பதியா் தீக்குளிக்க முயன்ால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூா் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி (71). இவரது மனைவி அலமேலு (70). இவா்கள் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தம்பதியா் மீது தண்ணீரை ஊற்றி அவா்களை மீட்டனா்.
தொடா்ந்து அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, மூத்த தம்பதியா் தாங்கள் வசித்து வந்த வீட்டை பெண் ஒருவா் அபகரித்துக்கொண்டதாகவும், தங்களை துரத்தி விட்டதாகவும் தெரிவித்தனா். ஆனால், அந்த வீடு தங்களுடையது என்றும், முறையாக வீட்டு வரி, மின் கட்டணம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனா். தங்களது வீட்டை மீட்டுத் தருவதுடன், அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனா். அவா்களை போலீஸாா் அழைத்து சென்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனா்.