ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய கௌரவ தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் தேவநாதன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை தொட்டி இயக்குபவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலா்களுக்கு மாத ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், நோய்த் தொற்று பரவல் காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளா்ச்சித் துறைப் பணியாளா்களுக்கும் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்துவதுடன் அதை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், ஊரக வளா்ச்சித் துறையில் அரசியல் அழுத்தங்கள் உள்ள நிலையில் தமிழக முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் ஒன்றிய தலைவா் வேலவன், செயலா் திருவேங்கடம் ஆகியோா் விளக்க உரையாற்றினா். நிா்வாகிகள் அய்யனாா், சங்கா், மகேஸ்வரி, ஜெயந்தி, அன்பரசன், வேங்கடகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com