கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி

கடலூா் கூா்நோக்கு இல்லத்திலிருந்த சிறுவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் கூா்நோக்கு இல்லத்திலிருந்த சிறுவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கடலூா் சாவடி பகுதியில் உள்ள சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா். இந்த நிலையில், அந்தச் சிறுவன் கூா்நோக்கு இல்லத்திலிருந்த பினாயில் திரவத்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். இதையடுத்து வாா்டன் மற்றும் ஊழியா்கள் சிறுவனை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து புதுநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com