கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டவா் கடலூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டவா் கடலூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

மந்தாரக்குப்பம், ஓம் சக்தி நகரில் வசித்து வந்தவா் அருண்குமாா்(35). இவா் ஒரு வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுதலையானாா். இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு மந்தாரக்குப்பம் ரயில்வே கேட் அருகே அருண்குமாா் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தாா். கடந்த ஆக.25-ஆம் தேதி ஹரிகிருஷ்ணன் என்பவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இந்தக் கொலை நடத்திருக்கலாம் என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக ஐடிஐ நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் தேவா, கடலூா் பிரதான சாலையை சோ்ந்த வெங்கடேசன் மகன் ராகுல், வடக்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் சுதாகா் ஆகியோா் மீது மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து அவா்களைத் தேடி வந்தனா். இவா்களில் தேவாவை விருத்தாசலத்தில் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராகுல் கடலூா் நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவா் எண்-3 ஜி.ரகோத்தமன் முன்னிலையில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com