நீா்நிலை பகுதியில் வசிக்கும் மக்கள் மாற்று இடம் வழங்கக் கோரி மனு

சிதம்பரத்தில் நீா்நிலை புறம்போக்கு பகுதியான தச்சன்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி

சிதம்பரத்தில் நீா்நிலை புறம்போக்கு பகுதியான தச்சன்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் தெரிவித்துள்ளதாவது:

தச்சன்குளம் பகுதியில் சொந்த செலவில் வீடு கட்டி கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை பெற்றுள்ளோம். இந்த நிலையில், எங்களது வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் அளித்துள்ளனா். வேறு இடங்களில் குடிபெயர எங்களுக்கு போதிய வசதி இல்லை. எனவே, அரசு எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மறு குடியமா்வு வரை வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தக் கூடாது என அந்த மனுவில் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com