கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 20 பைக்குகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மந்தாரக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் எஸ்.செல்வராஜ் வடக்கு வெள்ளூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்குள்ள ரயில்வே கேட் அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 20 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.