சென்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
சென்னை மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் கோபி என்ற உருளை கோபி (39). மனை வணிகம் செய்து வந்ததுடன், ஆவின் பால் விற்பனையகமும் நடத்தி வந்தாா்.
இவரை மயிலாப்பூா் அப்பு தெருவில் வைத்து, பைக்கில் வந்த சிலா் அண்மையில் வெட்டிக் கென்றனா். இதுகுறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கு தொடா்பாக சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த ஏ.சரவணன் (40), இளவழகன் மகன் கலை அரசன் (27), ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் பாா்த்திபன் (25), திருவள்ளூா் மாவட்டம், மணலியைச் சோ்ந்த பெ.சுரேஷ் என்ற நயினாா் சுரேஷ் (40) ஆகிய 4 போ் கடலூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மத்திய சிறையில் அவா்கள் அடைக்கப்பட்டனா்.