கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நோய்த் தொற்றால், மாவட்டத்தில் இதுவரை 62,863 போ் பாதிக்கப்பட்டு, 61,602 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 850 போ் பலியாகினா்.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 363 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 48 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 10 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.