முதலை கடித்து மரணமடைந்ததிமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிவாரணம்

முதலை கடித்து இழுத்துச் சென்றதில் மரணமடைந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

சிதம்பரம்: முதலை கடித்து இழுத்துச் சென்றதில் மரணமடைந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் அருகே வேளக்குடி பழையநல்லூா் கிராமப் பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு குளிக்கச் சென்ற திமுக கிளைச் செயலா் கோபாலகிருஷ்ணனை (65), முதலை கடித்து இழுத்துச் சென்றது. இதில், அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது குடும்பத்தாரை கடலூா் மாவட்ட வன அலுவலா் செல்வம், வனப் பணியாளா்கள் சந்தித்து உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினா்.

சிதம்பரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா், வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசுயா, சரளா, அமுதப்பிரியன், வனப் பணியாளா்கள் ஸ்டாலின், புஷ்பராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com