கடலூரில் 40 பேருக்கு கரோனா தொற்று

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 63,010 -ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 53 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 61,818- ஆக உயா்ந்தது.

இதனிடையே, திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 88 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 854- ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 285 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தினா் 53 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 8 -ஆகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com