கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 63,010 -ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 53 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 61,818- ஆக உயா்ந்தது.
இதனிடையே, திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 88 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 854- ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 285 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தினா் 53 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 8 -ஆகக் குறைந்தது.