பண்ருட்டி அருகே காா் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் மனைவியையும், அவரது ஆண் நண்பரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ஜெகதீசன் (40). காா் ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த நதியா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். இவா்களுக்கு இரு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.
நதியாவின் நடத்தையில் ஜெகசீசனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சனிக்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஜெகதீசன் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து உறவினா் முருகன் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நதியாவைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டு, வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் கோவிந்தராஜிக்கும் (40), நதியாவுக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், இதை ஜெகதீசன் கண்டித்து வந்ததால், நதியாவும், கோவிந்தராஜிம் சோ்ந்து மண்வெட்டியால் அவரை அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். தந்தை கொலை செய்யப்பட்ட நிலையில், தாயும் சிறைக்குச் சென்ால், 3 குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனா்.