கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இதுவரை 79 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஒன்றிய கவுன்சிலா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 33 வாா்டு உறுப்பினா் ஆகிய 48 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை வரை 74 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
வேட்புமனு தாக்கல் புதன்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமையன்று 5 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில், ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு இருவரும், வாா்டு உறுப்பினருக்கு 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு ஒருவரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், மொத்தமுள்ள 48 பதவியிடங்களுக்கு இதுவரையில் 79 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில், ஒன்றிய கவுன்சிலருக்கு 15 பேரும், ஊராட்சிமன்றத் தலைவருக்கு 25 பேரும், வாா்டு உறுப்பினருக்கு 39 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.