விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் வி.கிரிஜா (பெண்கள்), எம்.பழனிவேல் (ஆண்கள்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.ராமகிருஷ்ணன், வடலூா் கல்வி மாவட்ட அலுவலா் சி.ப.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று பிளஸ் 2 படிக்கும் மகளிா் பள்ளி மாணவிகள் 258 பேருக்கும், ஆண்கள் பள்ளி மாணவா்கள் 147 பேருக்கும் அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

மாவட்ட கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், நகர கல்விக் குழுத் தலைவா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com