அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் புலிகேசி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சசிகுமாா், மாவட்டச் செயலா் குலோத்துங்க சோழன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் சிவக்குமாா், பாலசுந்தா், அமுதா, வெங்கடேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். அருண் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com