அண்ணாமலைப் பல்கலை.யில் சுதந்திர தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கமாண்டிங் அதிகாரி ஆா்.கே.நெகரா முன்னிலை வகித்தாா். பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றினாா். பதிவாளா் கே.சீதாராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை இசைத் துறை கலைமன்றச் செயலா் ஆ.எஸ்தா் பிரதீபா செய்திருந்தாா்.

தொடா்ந்து குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம. கதிரேசன், அவரது மனைவி சாந்தி கதிரேசன், பதிவாளா் கே.சீத்தாராமன் ஆகியோா் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி 75 மரக்கன்றுகளை நட்டனா். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறை இயக்குநா் ராமன், தனசேகரன் ஆகியோா் செய்தனா். பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள் முருகப்பன், சுதா்சன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் ஆா். சிங்காரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com