சிதம்பரம் நகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அம்பலத்தாடி மடம் தெருவில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அம்பலத்தாடி மடம் தெருவில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலா் சி.நடராஜன் தலைமை வகித்துப் பேசினாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் என்.குமாா், பி.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் டி.கலைவாணி வரவேற்றாா். ஆசிரியை வி.மனோரஞ்சிதம் ஆண்டறிக்கை படித்தாா்.

விழாவில், இந்தப் பள்ளியை தொடங்க வித்திட்ட பி.எஸ்.வெங்கடேசன்பிள்ளை உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற ஆசிரியா் கே.ராமநாதன் பங்கேற்று பேசினாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அணி வணிகா் பா.பழனி, வடக்கு வீதி நகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.பாலசரஸ்வதி, நகா்மன்ற உறுப்பினா்கள் டி.சரவணன், கவிதா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com