போராட்ட அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினரின் போராட்ட அறிவிப்பையடுத்து அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினரின் போராட்ட அறிவிப்பையடுத்து அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கடலூா் வட்டம், சி.என்.பாளையம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிமனைப் பட்டா, குடிநீா், தரமான சாலை, மயானப் பாதை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஒப்பாரி வைக்கும் போராட்டம் ஆக.11-ஆம் தேதி நடைபெறும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் அறிவித்தது. ஆனால், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில் அன்றைய தினம் கோரிக்கை விளக்க கூட்டம் மட்டும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரா.பூபாலச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் சங்கத்தின் சாா்பில் மாவட்ட பொருளாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகிகள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆா்.தமிழரசன், கே.கோதண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு இ-பட்டா வழங்குவது, திடீா்குப்பத்தில் நீா்நிலை புறம்போக்கில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்குவது, மாதா கோயில் தலித் கிறிஸ்தவா்கள் செல்லும் பாதையை சீரமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதென முடிவெடுக்கப்பட்டதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com