பாமக கொடிக்கம்பம் அமைக்க எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பாமகவினா் கொடிக்கம்பம் அமைக்க விசிகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே பாமகவினா் கொடிக்கம்பம் அமைக்க விசிகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்ரமணியபுரத்தில் விசிகவினா் கொடிக்கம்பம் அமைத்தனா். இதற்கு பாமகவினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அதே பகுதியில் பாமகவினரும் கொடிக்கம்பம் அமைத்துக்கொள்ள அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததாக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கடலூா் மாவட்ட பாமக செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அந்தக் கட்சியினா் சுப்பிரமணியபுரத்தில் கொடிக்கம்பம் அமைக்க பூமி பூஜை செய்தனா்.

அப்போது அங்கு திரண்ட விசிகவினா், தங்கள் பகுதி அருகே பாமகவினா் கொடிக்கம்பம் அமைக்கக் கூடாதென எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் ஆகியோா் அங்குவந்து விசிகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக வருகிற 8-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com