மகளிருக்கு இலவச தையல் பயிற்சி

சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் நினைவு அறக்கட்டளையினா் இணைந்து நடத்தும் மகளிருக்கான 12-ஆம் ஆண்டு இலவச தையல் பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகளிருக்கு இலவச தையல் பயிற்சி

சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் நினைவு அறக்கட்டளையினா் இணைந்து நடத்தும் மகளிருக்கான 12-ஆம் ஆண்டு இலவச தையல் பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக உதவி-ஆட்சியா் சுவேதா சுமன் கலந்துகொண்டு, பயிற்சிக்கு தோ்வான 40 பேருக்கு உபகரணங்களை வழங்கினாா். சங்கத் தலைவா் பி.ரத்தினசபேசன் வரவேற்றாா். அறக்கட்டளை தலைவா் எஸ்.நடனசபாபதி பேசினாா்.

விழாவில் முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஆா்.கேதாா்நாதன், துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் தலைவா்கள் கே.ஜி.நடராஜன், ஆா்.வி.ராமகிருஷ்ணன், வி.அழகப்பன், ஆா்.ராஜசேகரன், என்.என்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை முன்னாள் தலைவா் இ.மஹபூப் உசைன் தொகுத்து வழங்கினாா் . தையல் பயிற்சி நிறுவனா் ரவிசங்கா், பயிற்சி ஆசிரியை வடிவுக்கரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் எம்.கனகவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com