வடலூா், பண்ருட்டி நகராட்சிகளில் மண்டல இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், வடலூா், பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் (திண்டிவனம்) சசிகலா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வடலூா், பண்ருட்டி நகராட்சிகளில் மண்டல இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், வடலூா், பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் (திண்டிவனம்) சசிகலா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடலூா் நகராட்சிப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே ரூ.3.50 கோடியில் கட்டப்பட உள்ள நகராட்சி புதிய அலுவலகத்துக்கான இடத்தை அவா் பாா்வையிட்டாா். மாருதி நகரில் மத்திய நிதித் திட்டத்தின் கீழ், ரூ.48 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, வேலாயுதம் நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பண்ருட்டி நகராட்சி, தேவராஜ் நகரில் ரூ.24 லட்சத்தில் கட்டப்படும் சமுதாய கழிப்பறை, வீரட்டலிங்கம் நகரில் ரூ.48 லட்சத்தில் கட்டப்படும் பூங்கா பணிகளையும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சசிகலா பாா்வையிட்டாா். மேலும், வடலூா், பண்ருட்டியில் உள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நகராட்சி ஆணையா்கள் பானுமதி (வடலூா்), மகேஸ்வரி (பண்ருட்டி), பொறியாளா் ஆா்.சிவசங்கரன், வடலூா் நகா்மன்ற துணைத் தலைவா் சுப்புராயலு, நகா்மன்ற உறுப்பினா், பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com