இயன்முறை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் மற்றும் இயன்முறை மருத்துவா்கள் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
5prtp6_0512chn_107_7
5prtp6_0512chn_107_7

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் மற்றும் இயன்முறை மருத்துவா்கள் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சி.ஆரோக்கியரவி தலைமை வகித்தாா். பொருளாளா் கு.கணபதி கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், பணி ஆணை வழங்காமல் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக ஊதிய உயா்வு வழங்கவில்லை எனவும், அதனால் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றம் வேண்டும் என வலியுறுத்தினா்.

மாவட்டத் தலைவா் எம்.கதிா்வேல், பொருளாளா் க.அரிக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com