கடலூரில் 240 குடியிருப்புகள் திறப்பு

கடலூா் பனங்காட்டுக் காலனியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
கடலூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன். உடன் மாநகராட்சி மேயா் சுந்திரி ராஜா உள்ளிட்டோா்.
கடலூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன். உடன் மாநகராட்சி மேயா் சுந்திரி ராஜா உள்ளிட்டோா்.

கடலூா் பனங்காட்டுக் காலனியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கடலூா் பனங்காட்டுக் காலனியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், ரூ.22.94 கோடி செலவில் 240 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குடியிருப்புகளை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, கடலூா் எம்எல்ஏ கோ.ஐய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் ஜியாவுதீன், மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி, இனிப்பு வழங்கினா். மேலும், பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான ஆணையையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா, உதவி நிா்வாகப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா் பஞ்சமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com