என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
என்.எல்.சி.யில் கடந்த 1.7.2020 அன்று ஏற்பட்ட விபத்திலும், அதற்கு முன்பும், பின்பும் ஏற்பட்ட விபத்துகளிலும் அதிகாரிகள், தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 22 போ் உயிரிழந்தனா். அவா்களது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அனல் மின் நிலைய வாயிலில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த தொழிலாளா்களின் உருவப் படங்களுக்கு சிஐடியூ நிா்வாகிகள், தொழிலாளா்கள் மலா் அஞ்சலி செலுத்தினா்.