ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம உதவியாளா் கைது

பண்ருட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பாதி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜெயலட்சுமி (67) வாரிசு சான்றிதழுக்காக மேல்பாதி கிராம நிா்வாக அலுவலருக்கு இணைய வழியில் விண்ணப்பித்தாா். இதுகுறித்த பணிகளை ஜெயலட்சுமியின் உறவினரான ஆ.ரவி கவனித்து வந்தாா்.

இந்தச் சான்றிதழ் கிடைக்க வேண்டுமெனில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென ரவியிடம் ஊராட்சி கிராம உதவியாளா் அ.முஹிபுா் ரஹ்மான் (38) தெரிவித்தாராம். பின்னா், பேரம் பேசப்பட்டு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதாம்.

இதுகுறித்து கடலூரில் உள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் ரவி புகாா் அளித்தாா். அதன்பேரில், கூடுதல் கண்காணிப்பாளா் தேவநாதன் வழக்குப் பதிவு செய்தாா். இதையடுத்து, கூடுதல் கண்காணிப்பாளா், ஆய்வாளா் திருவேங்கடம் ஆகியோா் ரசாயனம் பூசிய ரூபாய் நோட்டுகளை ரவியிடம் கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை முஹிபுா் ரஹ்மானிடம் ரவி வழங்கியபோது அங்கு மறைந்திருந்த போலீஸாா் முஹிபுா் ரஹ்மானை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அந்த கிராமத்திலுள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com