கடலூா்: மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாள்களில் புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாள்களில் புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை மொத்தம் 74,335 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியிருந்த நிலையில், ஜூலை 6-ஆம் தேதி வெளியான மருத்துவப்

பரிசோதனை முடிவில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,417-ஆக அதிகரித்தது. அதாவது கடந்த 6 நாள்களில் 82 பேருக்கு தொற்று உறுதியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

சிகிச்சை முடிந்து புதன்கிழமை மேலும் 6 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 73,435-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின்

மொத்த எண்ணிக்கை 895-ஆக உள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 85 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com