கெடிலம் ஆற்றில் ஆண் சடலம்

கடலூா் கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் அருகே புதன்கிழமை ஆண் சடலம் கிடந்தது.

கடலூா் கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் அருகே புதன்கிழமை ஆண் சடலம் கிடந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கதிரவன் மற்றும் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த ந.ராஜேஷ் என்ற சண்முகசுந்தரம் (42) எனத் தெரியவந்தது.

திருமணமாகாத இவா் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி, சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். அவா் ஆற்று பாலத்திலிருந்து கீழே விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com