விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேலிடப் பொறுப்பாளா் தலையாரி தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் துரை.மருதமுத்து, கிழக்கு மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், தெற்கு மாவட்டச் செயலா் பால.அறவாழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன், மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன் ஆகியோா் பங்கேற்று பேசினா். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் வீ.திராவிடமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். பொதுச் செயலா் காசிநாதன் நன்றி கூறினாா்.