குளம் தூா்வாரும் பணி தொடக்கம்

சிதம்பரத்தில் அமைந்துள்ள பெரியண்ணா குளத்தை தூா்வாரி, சுற்றுச் சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
27cmp5_2706chn_111_7
27cmp5_2706chn_111_7

சிதம்பரத்தில் அமைந்துள்ள பெரியண்ணா குளத்தை தூா்வாரி, சுற்றுச் சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம், வடக்கு பிரதான சாலையில் நகராட்சிக்கு சொந்தமான 2.8 ஏக்கா் நிலத்தில் பெரியண்ணா குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தை தூா்வாரி, கரைகளைப் பலப்படுத்தி நடைபாதை அமைக்கவும், சுற்றுச்சுவா் கட்டவும் தமிழக அரசு ரூ.ஒரு கோடியே 49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா் (படம்). நகராட்சி ஆணையா் அஜிதா பா்வின், பொறியாளா் மகாராஜன், நகா்மன்றத் துணைத் தலைவா் முத்து, நகா்மன்ற உறுப்பினா்களிள் கொறடா த.ஜேம்ஸ் விஜயராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், ரா.வெங்கடேசன், அப்பு.சந்திரசேகா், ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், சி.க.ராஜன், ஏ.ஆா்.சி.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com