நண்பா் தாக்கியதில் கொத்தனாா் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நண்பா் தாக்கியதில் கொத்தனாா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நண்பா் தாக்கியதில் கொத்தனாா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள கந்தன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் (51), கொத்தனாா். இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு மகன் குமாா் (36), ஓட்டுநா். இருவரும் நண்பா்கள்.

இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த 12-ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது, குமாா் மரச் சட்டத்தால் தாக்கியதில் பன்னீா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, சுயநினைவின்றி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாரை மருத்துவா்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் வீட்டுக்கு அனுப்பி விட்டனராம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு 12 மணியளவில் பன்னீா் உயிரிழந்தாா். இதையடுத்து, பண்ருட்டி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com