சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம்: போராட்டம் நடத்தத் தடை கோரி வழக்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பக்தா்கள் சாா்பில் தொழிலதிபா் எஸ்.ஆா்.ராமநாதன், டாக்டா் பிரசன்னா ராஜ்குமாா், தமிழ்நாடு கைவினைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.சேகா், பி.அண்ணாமலை, கே.மணிரத்தினம் ஆகியோா் சாா்பில் வழக்குரைஞா் ஹிமாவந்த் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி ஆன்மிகத்துக்கு அப்பாற்பட்ட இயக்கத்தினா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். பக்தா்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதுதொடா்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், பக்தா்கள் அச்ச உணா்வுடன் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவா்கள் அமைதியான முறையில் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

மேலும், இதுதொடா்பாக பல்வேறு பொய் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com