விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழா் மரபு வேளாண்மை மாநாடு

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தமிழா் மரபு வேளாண்மை மாநாடு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 5:40 pm

DIN

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தமிழா் மரபு வேளாண்மை மாநாடு அண்மையில் நடைபெற்றது.

தமிழக உழவா் முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் அந்த அமைப்பின் தலைமை ஆலோசகா் கி.வெங்கட்ராமன், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன், ஆந்திர வேளாண் அறிவியலாளா் ராமாஞ்சநேயலு, தாளாண்மை உழவா் இயக்கம் தா.வெ.நடராசன், பாமயன், சுயாட்சி இந்தியா அமைப்பின் தமிழகத் தலைவா் கே.பாலகிருட்டிணன், செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கரும்பு கண்ணதாசன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் கோட்டேரி சிவக்குமாா், மரபு நெல் களஞ்சியம் அமைப்பு சாா்பில் பாஸ்கா், தமிழக உழவா் முன்னணி தலைமைச் செயற்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் பேசினா்.

மாநாட்டில், மாநிலத்துக்கு ஏற்ற உயிா்ம வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும், இதுதொடா்பாக ‘தமிழா் மரபு வேளாண்மை கூட்டியக்கம்’ என்ற பெயரில் அனைத்து அமைப்பினரும் இணைந்து வருகிற 28-ஆம் தேதி திருச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.