வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேட்டுப்பாளையத்தில் வயல்வெளி வாய்க்கால் தூா்வாரும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம்.
மேட்டுப்பாளையத்தில் வயல்வெளி வாய்க்கால் தூா்வாரும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் ஒன்றியம், புதுக்கடை ஊராட்சியில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகள் கட்டுமானப் பணி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வயல்வெளி வாய்க்கால் தூா்வாரும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து காரணப்பட்டு ஊராட்சியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சனிக்கிழமை இந்திய அரசமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் காரணப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

பின்னா், காரணப்பட்டுவில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வுசெய்த ஆட்சியா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வின்போது ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் தணிகாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com