கடலூா் மாவட்டம், வடலூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வடலூா் நகராட்சியில் 75-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வடலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அபிநயா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.