காா் கவிழ்ந்ததில் 3 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயமடைந்தனா்.
காா் கவிழ்ந்ததில் 3 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலம், பெரியாா் நகா், தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் (56), இவரது மகன் சரவணன்(25), ஸ்ரீபெரும்புத்தூா், படப்பை, திருமகள் நகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் வாசுதேவன்(41). இவா்கள் மூவரும் காரில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றனா். அங்கு தரிசனம் முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை விருத்தாசலத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூா் அருகே வந்தபோது காரின் டயா் வெடித்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரிலிருந்த மூவரும் காயமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து காரிலிருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனாா். அங்கு முதலுதவிக்குப் பிறகு மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com