சிறுமிக்கு பாலியல் தொல்லை:ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிதம்பரம் அருகே உள்ள வாக்கூா் பூந்தோட்டத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (57), தொடக்கப் பள்ளி ஆசிரியா். இவா், கடந்த 24.11.2021 அன்று அதே பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக் குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் கருதி, அவருக்கு சமூக நலத் துறை மூலமாக அரசின் ஏதாவது ஒரு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் பெற்று வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் தி.கலாச்செல்வி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com