கடலூரில் காவலரின் காா் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் வசிப்பவா் முத்துக்குமரன் (43). கடலூா் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் முன் தனது காரை நிறுத்தியிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
முத்துக்குமரன் தனது குடும்பத்தினருடன் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தாா். இருப்பினும், காா் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.