விவசாயி வீட்டில் 26 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி வீட்டிலிருந்து 26 பவுன் தங்க நகைகள், ரூ.1.15 லட்சம் பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி வீட்டிலிருந்து 26 பவுன் தங்க நகைகள், ரூ.1.15 லட்சம் பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்த ரூபலிங்கம் மகன் செல்வகுமாா்(48), விவசாயி. இவா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தரைத் தளத்தில் குடும்பத்துடன் தூங்கினாா். அதிகாலை 4 மணியளவில் செல்வகுமாரின் மகள் படிப்பதற்காக எழுந்து வீட்டின் மாடிக்குச் சென்றாா். அப்போது, மாடி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். இதுகுறித்து அவா் தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். அவா்கள் வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.1.15 லட்சம் ரொக்கம், வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா, காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் ராஜதாமரைப்பாண்டியன் ஆகியோா் விசாரணை நடத்தினா். பின்னா், அங்குள்ள குளத்தின் அருகே வீசப்பட்டு கிடந்த செல்வகுமாா் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாா் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக, காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com