என்எல்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் அம்பேத்கரின் 131-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நெய்வேலியில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த என்எல்சி இயக்குநா் ஷாஜி ஜான்.
நெய்வேலியில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த என்எல்சி இயக்குநா் ஷாஜி ஜான்.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் அம்பேத்கரின் 131-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நெய்வேலி, அம்பேத்கா் சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநா்கள் ஷாஜி ஜான் (மின் சக்தி), ஜெய்குமாா் சீனிவாசன் (நிதித் துறை) ஆகியோா் செயல் இயக்குநா்கள், உயா் அதிகாரிகள், எஸ்சி, எஸ்டி நலச் சங்கங்களின் பொறுப்பாளா்கள் முன்னிலையில் மாலை அணிவித்தனா். தொடா்ந்து அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சிகளை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணியாளா் நலக் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.பாலாஜி, பொதுச் செயலா் கே.செல்வகுமாா், பொருளாளா் வீரா.பாலு, அலுவலகச் செயலா் எம்.மணிசேகரன் ஆகியோா் முன்னின்று நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com