கடலூா் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
கடலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த 8-ஆம் தேதி ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 74,256-ஆக இருந்தது. அதன் பிறகு மாவட்டத்தில் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் பண்ருட்டியைச் சோ்ந்தவருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 74,257-ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வருவோரில் ஒருவா் வீடு திரும்பினாா். இதனால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 73,360-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 895-ஆக உள்ளது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 16.74 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.