தீ தொண்டு வாரத்தையொட்டி கடலூா் வெள்ளிக் கடற்கரையில் தீயணைப்பு கருவிகள் குறித்து பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புத் துறை சாா்பில் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் தீயணைப்பு கருவிகள் குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்கும் அரங்கு அமைக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயகுமாா், சிறப்பு நிலைய அலுவலா்கள் ராஜசேகா், தண்டபாணி ஆகியோா் தீயணைப்புக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.