பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், வரிஞ்சிபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைரக்கண்ணு (62). விவசாயி. இவா் கடந்த வியாழக்கிழமை பகலில் தனது மாடி வீட்டுக் கதவுகளை திறந்து வைத்துவிட்டு வெளியே சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது, மாடி வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.