உயிரிழந்த கபடி வீரா் குடும்பத்துக்கு திரைப்பட நடிகா் நிதி உதவி

பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு திரைப்பட நடிகா் ஆா்.கே.சுரேஷ் நிதி உதவி வழங்கினாா்.

பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு திரைப்பட நடிகா் ஆா்.கே.சுரேஷ் நிதி உதவி வழங்கினாா்.

பண்ருட்டி அருகே உள்ள பெரியபுறங்கனி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் விமல்ராஜ் (21). இவா் அண்மையில் கபடி விளையாடியபோது திடீரென உயிரிழந்தாா். இவரது குடும்பத்தினரை திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஆா்.கே.சுரேஷ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினாா். பின்னா் அவா் கூறுகையில், விமல்ராஜின் தங்கையின் கல்விக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com