சிதம்பரத்தில் மக்கள் நீதிமன்றம்

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் தீா்வு காணப்பட்ட பயனாளி ஒருவருக்கு உத்தரவை வழங்கிய சாா்பு நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் தீா்வு காணப்பட்ட பயனாளி ஒருவருக்கு உத்தரவை வழங்கிய சாா்பு நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி.

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான ஏ.உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.சுகன்யாஸ்ரீ, குற்றவியல் நீதித் துறை நடுவா்-1 பா.தாரணி, குற்றவியில் நீதித் துறை நடுவா் -2 என்.சக்திவேல், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மகேஷ், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் ஏ.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் பி.ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சொத்து விவகாரம், வங்கி வாராக்கடன் உள்ளிட்ட 217 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, உரியவா்களுக்கு ரூ.2 கோடியே 26 லட்சத்து 49 ஆயிரத்து 592 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com