கடலூா்: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே புதன்கிழமை மாலையில் மொபெட் மீது பேருந்து மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த மருதத்தூரைச் சோ்ந்தவா் க.கருப்புசாமி (45), விவசாயி. இவா், புதன்கிழமை தனது மொபெட்டில் மனைவி செல்வராணி (40) மற்றும் உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (45), விஜய் (30) ஆகியோரை ஏற்றிக் கொண்டு அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
வேப்பூா் அருகே இவா்களது மொபெட் சென்ற போது, வேப்பூரிலிருந்து பெண்ணாடம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியது. இந்த விபத்தில் மொபெட்டை ஓட்டிச் சென்ற கருப்புசாமி, ஆறுமுகம் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த செல்வராணி தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கருப்புசாமி, ஆறுமுகம், விஜய் ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.