கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 162 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 64,813 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 64,975-ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கரோனா தொற்று, கடந்த 5-ஆம் தேதி 17 என்ற இரட்டை இலக்கத்தை எட்டியது. இது திங்கள்கிழமை 162 என மூன்று இலக்கத்தை தொட்டு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட 3,826 பேரில் 162 பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 24 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 63,761-ஆக உயா்ந்தது. பலியானோரின் மொத்த எண்ணிக்கை 876-ஆக உள்ளது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 283 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 55 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.