கணவா் சாவில் சந்தேகம்: மனைவி புகாா்

கடலூா் அருகே இளைஞா் தூக்கிட்டபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

கடலூா் அருகே இளைஞா் தூக்கிட்டபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

கடலூரை அடுத்துள்ள வழிசோதனைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் புகழேந்தி (31), வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சுரேஷினி (26). இவா்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி ஊா் திரும்பினா்.

சுரேஷினி வெங்கடாம்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அவரை அழைத்துச் செல்வதற்காக, புகழேந்தி செவ்வாய்க்கிழமை வழிசோதனைப்பாளையத்திலிருந்து வெங்கடாம்பேட்டைக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். ஆனால், புகழேந்து வெங்கடாம்பேட்டைக்கு வந்து சேரவில்லை.

இந்த நிலையில், சத்திரம் - சிலம்பிநாதன்பேட்டை சாலையில் உள்ள ஆதிமூலம் என்பவரது விவசாய நிலத்தில் புகழேந்தி தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தனது கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் சுரேஷினி புதன்கிழமை புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com