எம்.பி.க்கள் இடைநீக்கம்:தோமுச ஆா்ப்பாட்டம்
மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொமுசவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலங்களவை நடவடிக்கைகளுக்குத் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக 6 திமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 19 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பண்ருட்டி பணிமனை முன் தொமுசவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கடலூா் மண்டல துணைச் செயலா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
பண்ருட்டி பணிமனை நடத்துநா் செயலா் ஆா்.முரளிதரன், தொழில்நுட்பச் செயலா் எஸ்.தியாகராஜன், செயற்குழு உறுப்பினா்கள் சி.சங்கா், செல்வகுமாா், பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா். இதில், திமுக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.